Wednesday, November 4, 2015

கழிவுநீக்க முத்திரை

கழிவுநீக்க முத்திரை

கட்டைவிரலின் நுனிப்பகுதியால் மோதிர விரலின் கீழ் அதாவது மூன்றாவது ரேகை உள்ள இடத்தை தொடவும். மெல்லிய அழுத்தம் போதுமானது. சம்மணம், பத்மாசனம், சித்தாசனம் இந்தநிலையில் சுவாசத்தை சாதாரணமாக நிலையில் வைத்து அதை கவனித்து வரவேண்டும். ஒரு 20 நிமிடங்கள் செய்யும் போது உடலின் கழிவுகள் வெளியேற ஆரம்பிக்கும்.

அப்போது சிறுநீர் அதிகம் போவது, அதில் வாடை வீசுவது, மலம் அதிகவாடையுடன் அடிக்கடி போவது, கறுத்து மலம் வெளியேறுவது. வியர்வை அதிகம் வெளியேறுவது, அதில் வாடை வீசுவது, பேதி உண்டாவது, இந்த அறிகுறிகள் அனைத்தும் கழிவு நம் உடலைவிட்டு நீங்குவதாக அர்த்தம். பின்பு மூன்று மாதங்களுக்கொருமுறை ஏழுநாட்கள் தொடர்ந்து செய்தால் கழிவுகள் மீண்டும் சேராது.

No comments:

Post a Comment