Wednesday, November 4, 2015

மாதவிடாய் வலியை போக்கும் மகா சக்தி முத்திரை

மாதவிடாய் வலியை போக்கும் மகா சக்தி முத்திரை

முக்கியமான முத்திரை இந்த மகா சக்தி முத்திரை. பெயரிலேயே இதன் முழுப் பலனும் உள்ளது. மணமான தம்பதியர் தங்கள் நல்லுறவு சரிவர அமையவும், பிறப்புறுப்புக்கள் துடிப்புடன் இயங்கவும், உச்சகட்ட இன்பத்தினை அனுபவிக்கவும், வயிறு சம்பந்தமான பிரச்சினைகள் தீரவும், மாதவிடாய் சமயம் ஏற்படும் வலிகளைத் தீர்க்கவும் இந்த முத்திரை பெரிதும் பயன்படும். 

இம்முத்திரையைச் செய்வதன் மூலம் ஆரோக்கியமான குழந்தைகளை உருவாக்க முடியும். கட்டைவிரலை சுண்டுவிரலோடு இணைக்கவும். அப்படியே இரண்டு கைகளின் நுனியையும் இணைத்து, பின் மெதுவாக இரண்டு கைகளின் மோதிரவிரல் நுனியையும் இணைக்கவும். மற்ற விரல்கள் விரிந்து நேராக நீட்டிய படி இருக்க வேண்டும். இந்நிலையிலேயே கைகளை அடிவயிற்றுக்கு நேராக வைத்து முத்திரையை செய்யவும். 15 நிமிடம் பயிற்சி செய்ய வேண்டும். எப்போதும் போல் பிராண முத்திரையை இறுதியில் செய்யத் தவறக் கூடாது. 

குறிப்பு: கர்ப்பிணிகள் கட்டாயம் இந்த முத்திரையைச் செய்யக் கூடாது.

No comments:

Post a Comment